Wednesday, January 28, 2009

புதுப் பூ

அதோ !
கவிக்கடலில்
மரபு நீச்சல் போட்டு
புகழ் சொட்ட
நிற்கும் பலர் .

நானோ,
கால் நனைத்த மரபு நுரையிலும்,
சந்த அலையிலுமே,
மயங்கிப் போகிறேன்.

முரண்டு பிடிக்கவில்லை
முரண்பாடும் இல்லை

கடலை தொடுகின்ற
இந்த கரை
பிடித்திருக்கிறது .

புதுக் கவிதை
சிப்பிகள்
பொறுக்குவதிலேயே

இந்த குழந்தை
விருப்பம்
கொள்கிறது .

இனியவன் .ஜி .இளையராஜா .

1 comment:

Unknown said...

congrats. i dont know how to write in tamil scripts

mayil radha

Post a Comment