Wednesday, January 14, 2009

இவர்கள் புதியவர்கள் ....

கருத்த மேகம்
மழை வருமா ?

நனைவதற்கு

மனமில்லை அவனுக்கு
குடை கொண்டு செல்கிறான் .

பயணத்தின் பாதியிலே
மழை நின்று விட ,

அலுத்துக் கொள்கிறான் .

என்னடா இது !
இந்த மழையே
இப்படித்தான் ,

குடை இருந்தால்
மழை வராது ,
மழை வரும் போது
குடை இருக்காது .

மழை வரும் போது
குடை வைத்திருப்பினும் ,
குடை வைத்திருந்து
மழை இல்லையெனினும் ,

அவனின் குறிக்கோள் என்னவோ
நனையாமல் இருப்பது தானே ?

இவர்கள் புதியவர்கள்
இவர்களுக்கு
கடவுளும் வேண்டும்
கஷ்டமும் வேண்டும்.!!!!!!!!!!!!
இனியவன் ஜி .இளையராஜா

1 comment:

Unknown said...

koodai,mallai matter is the ulttaa from comedy of gowndamani&senthil kallae kandaa nayae kanum-
nayae kandaa kallae kanum... ok..ok i am jocking your matter is the best for the year 2009...


****appaavee nanban****

Post a Comment