Wednesday, January 28, 2009

எண்ணக் குமிழ்கள் 3

தோல்வியைக் கொண்டாடுவோம் .
போட்டி என்று ஒன்று இல்லை என்றால் வெற்றி தோல்வி என்பது கிடையாது .

தோல்வி என்பது ஒன்று இல்லை என்றால் வெற்றியின் இனிமையை அறிய இயலாது .

‘’பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து
பூமா தேவிச் சொன்னாளாம் , நீதான் ஒன்பது முறை எழுந்து நின்ற மாவீரன் என்று ’’.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டி பொறாமையாக மாறக்கூடாது .


நான் சிறு வயதாக இருந்தபோது என் வீட்டிற்கு அடிக்கடி என் தந்தையுடன் பேச வரும் ''டைலர் தாத்தா ’’சொன்னது நினைவுக்கு வருகிறது .

‘’பொறாமை ‘’ என்பது இருக்க கூடாது இருந்தால் அதை திருப்பி போட்ட நிலைதான் என்பார் {மைறபோ }.

தயவு செய்து ,முயற்சிகாதவர்கள் தோல்வியைப்பற்றி பேசாதீர்கள் .

ஒரு வேலை தோற்று விட்டால் என்று நினைத்தே ,சிலர் சோதனைகளை தள்ளி போடுகிறார்கள் .

தோற்று போவதில் கூட வெற்றியைத் துரத்தி தோற்றுப்போக வேண்டும் .அந்த தோல்வி தான் அடுத்த வெற்றிக்கு வித்தாக அமையும் .

வள்ளுவன் சொல்லுவான் ,
‘’யானை பிழைத்த வேல் ஏந்தல் அரிது ”.

{ஒரு காட்டில் முயலை வெற்றிகரமாக பிடித்து விட்டேன் என்பதை விட .ஒரு யானையை வேட்டையாடப் போய் உன் வேலே பறி போவது தான் வீரம் }

இன்று உலக அளவில் பேசப்படுகிற இந்தியர் அமிதாப்பச்சனின் குரல் ஆரம்ப காலத்தில் ,
இலங்கை வானொலியில் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்ட ஒன்று .

அன்று அவர் தோற்காமல் போயிருந்தால்
இன்று இந்த நிலையை அடைந்திருப்பரா ?.

எனவே ,

நண்பர்களே ,தோல்வியைக் கொண்டாடுவோம் .
இனியவன் .ஜி . இளையராஜா

No comments:

Post a Comment