Wednesday, January 28, 2009

ஒரு கரித் துண்டும் சில வண்ணப் பொடிகளும் .

அந்த
உயர்ந்த ஆலமரத்தின் அடியில்
பேருந்து
நிறுத்தத்திற்கு அருகில்

எனைப் பலமுறைப்
பார்த்திருக்கலாம் .

காய்ந்த தரை
ஒரு கரித்துண்டு
சில வண்ணப் பொடிகள்.

சாலையை யொட்டிய தரை
அடுத்து ஒரு சின்ன மேடை
ஓரமாய் ஒருக் கூடை .

கூடைக்குள் இரண்டு பழைய வேட்டிகள்
ஒரு கிழிந்த துண்டு
என் காதலியின்
பழைய
கருப்பு வெள்ளை
புகைப்படம் .

ஒரு கண்ணாடிக் கோப்பையில்
காலையில்
குடித்தது போக
மீதித் தேநீர்

என் ரொட்டித் துண்டுக்கு காத்திருக்கும்
நான்கு காக்காய்கள் .

சட்டைப் பையில்
நேற்றைய ஓவியத்திற்கான
சில எட்டனாக்களும்,
சில காலனாக்களும் .

பெரும்பாலும் என்
ஓவியங்கள்
கிருஷ்ணனோ ,
சிவனோ இல்லை

என் காதலியின்
காதலின்
முகம் மட்டுமே

இன்று புதிய ஓவியம்
அவளின் தெற்றுப்பல்
தெரியும் சிரிப்பு.

அவள் பார்த்திருந்தால்
வழக்கம் போல்
ஒரு முத்தம் தந்திருப்பாள்

அதற்க்காகவே
பத்துப் படங்களை வரையலாம்

வரைந்த ஓவியத்தை
பல கோணங்களில் பார்கிறேன்

நிழலை பிரதிப் பலிக்கவே
நேரம் எடுத்துக் கொள்கிறேனே ?
அசலை செதுக்க
என் செய்திருப்பன்
பிரம்மன் ?

ஐயோ !!!????????
எங்கிருந்து வந்தது
அந்த மழை

தெறித்து ஓடும் மக்கள் கூட்டம்
ஓடும் வேகத்தில்
ஒருவன்
எனை
கீழே தள்ளிவிட
அடுத்தவன் என் காலை மிதிக்க
கொடுரமான வலி ...

மேடையின்
ஓரமாய் உட்காருகிறேன்
பேய் எனப் பேயும் மழை .

அடைமழையில் அழுகிறேன்.

உற்றுப் பார்பவற்கும் ,
பேருந்து நிலையத் தினின்று எட்டிப் பார்பவர்கும்

நான் அழுவது
கால் வலிக்காக அல்ல
கரையும் காதலியின் ஓவியத்திற்காக .

இனியவன் .ஜி .இளையராஜா

No comments:

Post a Comment