Wednesday, January 14, 2009

கவிதை சாரல் அறிமுகம் 1

ஒரு நாள்

இல்லாத ஊருக்கு
வழி கேட்டேன்
நில்லாத காற்றிடம் ,

புரியாத மொழியில் சொன்னது
தெரியாத பூவிடம் கேட்க சொல்லி ,,

கரையாத பொருளை கரைக்க
மறையாத கானல் நீர் தேவை .

சுற்றாத திசையில் பூமி சுத்த ,

பஞ்சும் நெருப்பும்
பற்றாத விதிக்கு ஒப்பம் இட்டால்
குற்றால அருவி வானோக்கி தாவும் .

சிக்காத கிளி ஒன்று
சொல்லாத ஆருடம் சொல்ல ,

இல்லாத பொருளில் கவிபடித்து
எனை கொல்லாமல் விடுக !!!!!!!!!!!!

இனியவன் ஜி .இளையராஜா

2 comments:

Unknown said...

i think u need to consult to a doctor ok....

****appaavee nanban****

Unknown said...

enakku peditha kavithai kkal la ithu um 1

Post a Comment