Wednesday, January 14, 2009

எண்ணக் குமிழ்கள் 1

வள்ளுவன் வாய் மொழி போல் ,
எண்ணத்தின் கன்னக் கதுப்புகள் சிவக்கும் போதெல்லாம் ,உனைச் சுற்றி பல வண்ண விளக்குகள் எரியும் .
இருக் குழுக்கள் உண்டு ,
ஒன்று - இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் .
இரண்டு -மாறிவிட்ட இயற்கையில் மகிழ்ட்சி காண்பவர்கள்
சில நேரங்களில் விதிகளை மாற்ற வேண்டும் ,
சில நேரங்களில் விதிகளுக்கேற்ப நாம் மாற வேண்டும் .
அது ஒரு செருப்புத் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வு . நேர்முகத்தேர்வில் தகுதி பெற்ற இருவர்கள் .

யாருக்கு வேலை தருவது என்பது கேள்விக்குறியாக ?

மேலாளர் ,இருவரையும் ஒரு குறிபிட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் நிலைப் பற்றியும் ,அவர்களின் செருப்பின் மீதான விருப்பு வெறுப்பு பற்றியும் அறிந்து வரச் செய்தார் . இருவரில் ஒருவர் சொன்னார் ,

இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை , இங்கு நம்மால் வேருன்ற முடியாது .

இரண்டாமவர் சொன்னார் ,இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை , எனவே நாம் செருப்பை அறிமுகப்படுத்தி விற்பனையில் கோலோய்ச்ச்சலாம் .

இரண்டாமவற்கே வேலை கிடைத்தது .

ஒரே நிகழ்ச்சியைய் இரு வேறான மன நிலையில் காண்பது ,இரு சமையற் நிபுணர்கள் ,
இரு பப்பாளியை அறிகின்றனர் . இருவரின் பப்பளிக்குள்ளும் விதை இல்லை .
முதல் சமையலர் சொல்கிறார் ,இந்த பப்பாளி சரி இல்லை .

இரண்டாமவர் , ஆஹா விதைகளை நீக்கும் வேலை மிட்சம் .

நான் முன்பே சொன்னது போல் ,

இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் .அல்லது மாறிவிட்ட இயற்கையில் மகிழ்ச்சி காண வேண்டும் .


உன்னை புதுப்பித்துக் கொள்ள ,அன்றி ஓடும் உலக நதியில் உன் உராய்வை உயிர்பிதுக்கொள்ள நீ சூடும் எந்த பூவும் அழகு தான் .


இனியவன் .ஜி .இளையராஜா

.

1 comment:

Unknown said...

k.bagyarajuku oru murugakai matter poll
g.Ilaiyarajavirkku oru papalli kidaithuvittathu
asathugal......thooya tamilooku idaiyul chennai tamil jour....

****appaavee nanban****

Post a Comment