Wednesday, January 28, 2009

பால் வெளித் திரள் .

தூக்கம் விழித்த
பின்னிரவில் ,
வெளிக் காற்று வாங்கி வான் நோக்கினேன்.

எரியும் நட்சத்திரங்கள்
ஏற்றி வைத்த தீபங்களாய் ?

அறிவியல் சொல்கிறது
ஆயிரமாயிரம் சூரியக் கும்பங்கள்
பால்வெளி திரளில்
பயணிக்கின்றதாம்.

அந்தக் குடும்பங்களில்
பூமி இருக்குமா ?
எனில்,

மனித வளர்ச்சி ?
மொழி வளர்ச்சி ?
அறிவியல் ?

தீயைக் கண்டறிந்திருப்பனா ?
திராவிடம் வளர்திருப்பனா ?
அங்கே
தமிழ் இருக்குமா ?
காதல் ?
கவிதை ?
இசை ?

அரசியல் ?
மதம் ?
சாதி?
தீண்டாமை ?


பொறாமை ?
இன வேற்றுமை ?
மொழிக் கூச்சல் ?
நிலக் கோட்பாடு ?
நீருக்குப் போராட்டம் ?

திருட்டு ?
விபச்சாரம் ?
தீவிரவாதம் ?
கல்விக்கு கட்டணம் ?
வரதட்சணை ?
விதி மீறல் ?

எது இருக்கிறதோ இல்லையோ

வேலை கிடைக்குமா ?

விண்ணப்ப படிவம்
எங்கே கிடைக்கும் ?

கையுட்டு ஏதும்
தேவைப் படுமா ?

விபரம்
அறிந்தவர்
தொடர்புக் கொள்க ????????????????????????????

விழிப்புடன்
மனிதன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இனியவன் .ஜி .இளையராஜா .

No comments:

Post a Comment