Tuesday, January 27, 2009

கவனம் கலைத்தவள்

தெரியாத முள்ளில்
கால் வைக்க
தைக்குமே முள்
அந்த கணத்தில் ,

எதேச்சையாய் வானம் நோக்க
எரிந்து விழுமே
எரி நட்சத்திரம்
அந்த கணத்தில் ,

கரைத் தொட்டு மீண்டும்
கடலைச் சேருமே
அலை அந்த கணத்தில்,

அழுகின்ற மழலை
கவனிக்கிறார்களா
பார்த்து ,
மீண்டும்
அழத் தொடங்குமே
அந்த கணத்தில்,

மனித இனம்
நெருங்கினாலே
கிலையினின்று
பறக்குமே பறவை
அந்த கணத்தில்,

தீக்குச்சிக்கும்
தீப்பெட்டிக்கும்
உரசலில் பிறக்குமே
நெருப்பு
அந்த கணத்தில்,

கொண்டேன்
கொண்டேன்
காதல் கொண்டேன்.


இனியவன் .ஜி .இளையராஜா

1 comment:

Unknown said...

iiniyavan ney un varikal ovuondrum
tamil iln amutham unda mayakkathi ennul
ootriyathu,..............

Post a Comment