Saturday, March 14, 2009

எண்ணக் குமிழ்கள் 4

கொள்கை கொள் .

இலக்கு இல்லாமல் பயணிக்கும் அம்பு வெற்றியை நிர்ணயிக்குமா ?

பிறந்து விட்டோம் என்று வாழாதே ,நீ பிறந்ததே வாழ்வதற்குத்தான் .

வாழ்க்கை உன்னை எடுத்துச் செல்வதா ? இல்லை ,நீ வாழ்வை எடுத்துச் செல் .
எது வேண்டும் ?எது வேண்டாம் முடிவு செய் .

ஒரு பாறையில் தேவையானதை மட்டும் வரைந்தால் , அது ஓவியம் .
தேவையில்லாததை நீக்கி விட்டால் , அது சிற்பம் .

சிற்பம் வரைவதாயினும் ,ஓவியம் வரைவதாயினும் முதலில் நீ தீர்மானிக்க வேண்டும் .

ஒரு பேருந்து நிலையம் ,
எங்கு செல்வது என்று தெரியாமலேயே நீ சுற்றிக் கொண்டிருந்தால், என்றைக்கும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .

எந்த ஊருக்கு போவது என்பதை தீமானித்து விட்டால் ,எப்படி அதை சுலபமாக அடைவது ?

அதற்கான முயற்சிகளில் இறங்குவோமானால் , இலக்கை அடைவது எளிது .

கொள்கை கொள் ,தொடு வில் ,வெற்றி இல்லை தொலைவில் .

இனியவன். ஜி .இளையராஜா

No comments:

Post a Comment