Tuesday, April 28, 2009

வானவில் கிளியே

என் கிரகத்தில் இறங்கிய
செயற்கைக்கோள் நீ
சரியான தளத்தில் இறங்கியதால்
பேருவகை கொள் நீ

நேற்றுவரை என் கிரகத்தில்
நாதஸ்வர இசைகள் இல்லை
இராட்சச காற்றாடிகளின்
விசைகள் இல்லை

கற்பனையில் வந்த தேவதைகள்
இன்று கண்ணடித்து செல்ல
வானிலை ஆய்வாளன்
சொல்லாத புயலொன்று
என் வாழ்வில் வீசுதடி

வவ்வால்கள் ஒலியெல்லாம்
என் காதில் கேட்குதடி
சோதிட கட்டங்கள்
சாதகமாய் இருக்குமா ?
சொல்லிவிட்டுச் செல்லடி
என் வானவில் கிளியே.

பூபாளம் பாடும் முன்
கண் விழிக்கிறேன் .
புல் நுனியில் நின்று
கவிதை வரைகின்றேன்.

திடிரென,
எனக்குள் ஏற்பட்ட மாற்றமா ?
இதுவேதான் காதலுக்கு தேற்றமா?

இனியவன் .ஜி.இளையராஜா

1 comment:

Anonymous said...

i found a diffrent way of thinking from you .good keep it up ,and write more

Post a Comment