Tuesday, April 28, 2009

நிலாக் காலம்

புல்லாங்குழல்
துளைகள் நீ
உன்னில் ஊடுருவும்
காற்று நான்
இசையானோம் .

அழகிய அலைகள் நீ
பதிந்த சுவடுகள் நான்
கரைந்து போனோம்.

நீர்நிலை
நீ
குளிர்நிலை
நான்
உறைந்து போனோம் .

உன்னில் நானும்
என்னில் நீயும் உணர்வுகளில்
மறைந்து போனோம்.

சிப்பி நீ
மழை துளி நான்
முத்தானோம்.

விழி நீ
ஒளி நான்
கட்சியானோம்.

வார்த்தை நான்
பொருள் நீ
மொழியானோம்

புள்ளியாய் நீ
கோடுகளாய் நான்
கோலமானோம் .

எதிர்ப்புகளை
மீறாததால்
வெவ்வேறு குடும்பமாகி
காதலில் காலமானோம்.


இனியவன் .ஜி.இளையராஜா

No comments:

Post a Comment