Tuesday, April 28, 2009

கறி சமைப்போம் வா !

வலிகள் தான் வாழ்க்கை
வளைந்து கொடுப்போம்.
வண்ணத்துப்பூச்சியாய் வாழ்ர்ந்து பார்போம்.

மொழி பேசும் ஊமையாய்
விழி நீரை துடைத்து
இடி தாங்கிய வாழ்வு
இன்றோடு முடியுமா?

காளான் கீழ் வாழும்
சூரியனாய் இல்லாமல்
கற்பனையிலாவது நாம் கவலை மறப்போம்.

காட்சிகள் மட்டுமே வேறு
கலங்கரை இல்லாத கடலலை கப்பலாய்
தினம் கவலைகள் நூறு.

சோம்பலாய் இருந்து
சாம்பல் ஆகாமல்
புண்ணுக்கு மருந்திட்டது போதும்
வா !போருக்குப் போவோம்.

விண்மீன் வெளிச்சங்கள் போதும்
விரக்தியை விரட்ட,
சிறுமீன் போதும் சுறாக்களை பிடிக்க

எண்ணங்களை தூசு தட்டி
தன்னம்பிக்கை வண்ணம் பூசு
வெளிச்சங்கள் உன் வாழ்வில்
தானாய் தீந்தேனாய் வரும்.

உன்னை பகுத்த வாழ்வை
வரிசைப் படுத்து ,
உந்தன் வலிகளை எல்லாம்
வாரி இசைப் படுத்து.

வீறு கொண்டு வா
அணி அமைப்போம்
கவலை காய்களை அறுத்து
மகிழ்ச்சி கறி சமைப்போம்.

இனியவன் .ஜி.இளையராஜா

No comments:

Post a Comment