Friday, September 4, 2009

நாட்டுபுறப் பாடல் !

சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?

அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா ?

ஆத்தங்கரை ஓரத்துல
அந்தி மழை மேகத்துல
சேர்ந்து நாம நனஞ்சிருந்தோமே ,
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

கம்மாக்கரை ஓரத்துல ,
கால்வாயுக்கு பக்கத்துல
உம்மடி மேல படுதிருந்தேனே ?
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

ஆடு மேய்க்க வருகையில
ஐயனாரப்பன் கோவிலிலே '
கைய புடுச்சி இழுத்தேனே ,
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

கொய்ய மரத்துல அணில் புள்ள
நீ தான் எனக்கு மாப்புள்ள
சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?

எங்கப்பன்கிட்ட பொண்ணு கேளு
சேர்ந்து வாழ மண்ணு கேளு
சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?
இனியவன் .ஜி.இளையராஜா

3 comments:

Unknown said...

ma mara solayauma maranthta un sornam

Mayil said...

சினிமாவுக்கே ட்யூன் போடலாம் போலிருக்கே இந்த பாட்டை வைச்சு

Mayil said...

சினிமாவுக்கே ட்யூன் போடலாம் போலிருக்கே இந்த பாட்டை வைச்சு

Post a Comment