Tuesday, April 28, 2009

புதியதொரு நிலவு செய்வோம் !

இரவின் நிலவினை இரவல் வாங்காமல்
இன்னுமொரு நிலவு செய்வோம் !
இருண்ட வறுமையை இல்லாமல் செய்ய,

சிவப்புக் கோட்டில்
பச்சை விளக்கெரிய,
பூமி முழுதும் பயிர் செய்வோம்
புன்னகை மட்டும் கொண்ட
உயிர் செய்வோம்.

களத்து மேட்டில்
வறண்டு போன நிலத்தில்
உழவனின் திருவடியும்,
காளையின் குளம்படியும்,
நேற்று கண்டேன்.

வா! நாளை மழை வந்து
கரையும் முன்பாய் ,
புகைப்படம் எடுத்து கோப்பிடுவோம்,
சமகாலத் தோழர்களை கூப்பிடுவோம்.

கணினி காதலன் எனக்கும்
கலப்பை பிடிக்க ஆசை .
வா! சேர்ந்து செய்வோம் உழவு பூசை.

நாளை அந்த புகைப்படம்,
வெறும் கண்காட்சி,
இந்திய விளைச்சலுக்கு,
இனி நம் மண் சாட்சி .
இனியவன் .ஜி .இளையராஜா

1 comment:

Unknown said...

en 2009 apram entha kavithaium podala busya ezuthunga bos

Post a Comment