Saturday, March 14, 2009

அலையில் ஆடும் படகு

பேசிக்கொள்ளாமலேயே
நீயும் நானும்
வெகு நேரம் அமர்ந்திருக்கிறோம் ,
உரக்க கத்திப் பெய்கிறது மழை .

புத்தகங்களை பல முறை
பரிமாறிக் கொள்கிறோம்
அதென்னவோ
உன்னிடம் இருந்து திரும்புகையில்
என் புத்தகத்திற்கு
சிறகு முளைத்து விடுகிறது .

அன்றைக்கு நீ
ஏதேதோ கதைச் சொல்லி
சிரித்துக் கொண்டே இருக்கிறாய்
அசைவற்று நிற்கிறேன்
உன் அசைவில்.

எல்லோரிடமும் பென்சில் வாங்கி
திருப்பி தந்திருக்கிறாய்
என்னிடம் இருந்து
நீ வாங்கியது ஒருமுறைதான்
அதை ஏன் திருப்பி தரவே இல்லை?

விளையாட்டாய்
உன் தோழி சடையை பிடித்து இழுக்க ,
நீ தான் இழுத்தாய்
என சண்டை போட்டாயே
அன்று முதல்
ஆரம்பித்தது
உன் மீதான
என் உட்கிரகிப்புகள் .

அன்று நீ அழகாக
பாடியபோது
ஆசிரியர் முதல் அனைவரும் கை தட்ட
நான் உன்னை பாராட்டவே இல்லை
ஏனென்று இதுவரை தெரியவில்லை
அதைப் பற்றி நீயும் கேட்கவே இல்லை .

உன் தந்தைக்கு
வேலை மாற்றல்
வேறொரு ஊருக்கு
நீ பயணிக்கிறாய் .
எப்போதும் போல
நீ சிரித்து விட்டு செல்கிறாய்
நானோ
அலையில் ஆடும் படகாய்.

இனியவன்.ஜி.இளையராஜா

1 comment:

Unknown said...

aathu than pengal gunam
unnai puriya vaipargal
pengal
eraivnin nal padipu,
pengalai purithiu kol....
aathu mudiyathu..........
muyarchi sai.............
kavithi nee kathal vayapattathai
ulagukku solgirathu,
thodaratum un kavithai...
nichiyam thodarum........
(karanam nee kathalikirai...(oolagathi)

valthugal
nanpan
satheesh kumar.

Post a Comment